Tuesday, June 30, 2015

Friday, May 1, 2015

Teaching of Islam (tamil)


நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் ஹழ்ரத் ஆலி
ரழியல்லாஹூ அன்ஹூ
அவர்களுக்கு சொன்னார்கள்
அலியே ஐந்து விசயத்தை
தினமும் செய்யாமல்
உறங்கவேண்டாம்.
1. முழு குர்ஆனை ஓதாமல்
உறங்காதே.
2.தினமும் 4000 தீனார்கள்
தர்மம் செய்யாமல் உறங்காதே.
3.க அபதுல்லாஹ்வை தவாபு
செய்யாமல் உறங்காதே.
4.சுவர்க்கத்தில் உனது இடத்தை
பாதுகாக்காமல் ஊறங்காதே.
5. உனது எதிரியைக்
கொல்லாமல்
உறங்காதே...என்னக்கூற
நாயகமே அனைத்தும் ஒரு
இரவில் எப்படி சாத்தியம் என
அலி நாயகம் கேட்க நபிகள்
சொன்னார்கள்
1.குல்ஹூவல்லாஹூ சூராவை
3முறை ஓதினால் குர்ஆன்
முழுவதும் ஓதிய நன்மை
பெறுவீர்.
2.சூரத்துல் பாத்திஹாவை 4
முறை ஓதினால் 4000 தீனார்கள்
தர்மமா செய்த நன்மை பெறுவீர் .
3.நான்காம் கலிமாவை 10
முறை ஓதினால் கஅபாவை
தவாபு செய்த நன்மை பெறுவீர்
4.லாஹவ்ல வலா குவ்வத்த
இல்லா பில்லாஹில்
அலிய்யில் அளீம் என்று 10
முறை ஓதினால் சுவனத்தில்
உமது இடத்தை பாதுகாத்த
நன்மையை பெறுவீர்
5. அஸ்தக்பிருல்லாஹல் அளீம்
வ அதூபு இலைஹி என10
முறை ஓதினால் உமது
எதிரியை கொன்றதற்கு சமம்
என கூறினார்கள்.. இன்ஷா
அல்லாஹ் நாளும் ஓதி நன்மை
பெறுவோம் .

Sent from my BlackBerry 10 smartphone.

Wednesday, April 8, 2015

Quranic ayah of today

‎இன்று ஒரு குர்ஆன் வசனம் - وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ ۗ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ  ﴿2:207﴾
2:207. இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.

Sent from my BlackBerry 10 smartphone.

Monday, April 6, 2015

Today's quran ayah

‎இன்று ஒரு குர்ஆன் வசனம் - وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ ۚ فَحَسْبُهُ جَهَنَّمُ ۚ وَلَبِئْسَ الْمِهَادُ  ﴿2:206﴾
2:206. "அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்" என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது; அவனுக்கு நரகமே போதுமானது நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்.

Tuesday, March 31, 2015

‎இன்று ஒரு குர்ஆன் வசனம் - لَّيْسَ الْبِرَّ أَن تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَٰكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَىٰ حُبِّهِ ذَوِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا ۖ وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ ۗ أُولَٰئِكَ الَّذِينَ صَدَقُوا ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُتَّقُونَ  ﴿2:177﴾
2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).

Sent from my BlackBerry 10 smartphone.

Monday, March 30, 2015

‎இன்று ஒரு குர்ஆன் வசனம் - إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنزَلَ اللَّهُ مِنَ الْكِتَابِ وَيَشْتَرُونَ بِهِ ثَمَنًا قَلِيلًا ۙ أُولَٰئِكَ مَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ إِلَّا النَّارَ وَلَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ  ﴿2:174﴾
2:174. எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.


Sent from my BlackBerry 10 smartphone.

Friday, March 20, 2015

Why Do Parents Show Their Anger On Their Kids (research)




Assalamu alaikum (wt)
In my point of view the reason parents get furious with their children can be due to problems/fight inbetween the parents.. Most of the mothers show their anger on children & specially when they get furious with husband,they show that anger on their kids.. This is a very negative attitude of mothers.This should be avoided..  & next thing is some parents beat their children for everythng, this is because they think we can correct our children by hitting them harsh. & they beat their kids in an unappropriate manner.. this can lead to death too..
Every parents think they should bringup their kids as good citizens but they miss it.. y??? It can b due to their lack of kindness, appreciation & more harshness..

jazakallah for inviting me to share my views in ur proposal.. May allah grant u success in this great work...!
              Wassalam..
                                           ~nzknzk~


Sunday, March 8, 2015

Day of Judgement

‎!!!!தன்னந்தனியே தனித்து நிற்கும் நாள்…!!!!!



73:14. அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்ககளாகிவிடும்.

82:1. வானம் பிளந்து விடும்போது

82:2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-

82:3. கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,

82:4. கப்றுகள் திறக்கப்படும் போது,

82:5. ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.

81:1. சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது

81:2. நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-

81:3. மலைகள் பெயர்க்கப்படும் போது

101:4.அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.

80:34.அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் – தன் சகோதரனை விட்டும் -

80:35.தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;

80:36.தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-

80:37.அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.

22:2. அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல

39:68. ஸுர் (எக்காளம்) ஊதப்படடால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் – அல்லாஹ் நாடியவர்களைத் தவிர – மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.

50:41.மேலும், சமீபமான இடத்திலிருந்து கூவி அழைப்பவர் அழைக்கும் நாளை(ப் பற்றி நபியே!) நீர் செவிமடுப்பீராக.

50:42. அந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மாித்தோர்) வெளியேறும் நாளாகும்.

36:51. மேலும், ஸுர் ஊதப்படடதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.

36:52. "எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?" என்று அவர்கள் கேட்பார்கள்.அர்ரஹ்மான் வாக்களித்ததும்,(அவனுடைய) தூதர்கள் உண்மையென கூறியதும் இதுதான்" (என்ற அவர்களுக்கு கூறப்படும்).

39:68. ஸுர் (எக்காளம்) ஊதப்படடால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் – அல்லாஹ் நாடியவர்களைத் தவிர – மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.

19:80.இன்னும் (தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவற்றையும் நாம் அனந்தரங் கொள்வோம்; (இவற்றையெல்லாம் விட்டு) அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான்.

50:22."நீ இதைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய்; (இப்பொழுது) உன் (பார்வையை) விட்டு உனது திரையை நாம் அகற்றி விட்டோம். எனவே, இன்று உன் பார்வை கூர்மையாக இருக்கிறது."" (என்று கூறப்படும்).

10:45.அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில், தாங்கள் (ஒரு) பகலில் சொற்ப காலமே இவ்வுலகில் தங்கியிருந்ததாக (அவர்கள் எண்ணுவார்கள் ; அப்போது) தம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்து விட்டார்கள்; மேலும் அவர்கள் நேர்வழி பெற்றிருக்கவில்லை.

79:35. அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.

23:101.எனவே ஸ_ர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது; ஒருவருக்கொருவர் விசாாித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.

44:41.ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

70:10. (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாாிக்கமாட்டான்.

82:19. அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.

3:30. ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன்முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்;
அல்லாஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான். இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான்.

14:43. (அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும், விரைந்தோடுபவாகளாகவும் அவர்கள் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது. இன்னும், அவர்களுடைய இருதயங்கள் (திடுக்கங்க கொண்டு) சூணியமாக இருக்கும்.

18:48.அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வாிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; "நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்"" (என்று சொல்லப்படும்).

18:49.இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், "எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பொியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவ வில்லையே!"" என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள். ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.

24:24. அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும்.

41:20.இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராகன அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.

41:21.அவர்கள் தம் தோல்களை நோக்கி, "எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறுனீர்கள்?"" என்று கேட்பார்கள்; அதற்கு அவை; "எல்லாப் பொருட்களையும் பேசம் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசம்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்"" என்று கூறும்.

70:10. (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாாிக்கமாட்டான்.

70:11.அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாாித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிாியப்படுவான்: தன் மக்களையும்-

70:12.தன் மனைவியையும், தன் சகோதரனையும்-

70:13.அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-

70:14.இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிாியப்படுவான்).

52:46. அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது, அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

36:65. அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.

69:25. ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; "என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!

69:26. "அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-

69:27. "(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?

69:28. "என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!

69:29. "என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!"" (என்று அரற்றுவான்).

69:30. "(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.""

69:31. "பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.

25:27. அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக்கொண்டு; "அத்தூதருடன் நானும் – (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண[truncated by WhatsApp]

Sent from my BlackBerry 10 smartphone.

Wednesday, February 25, 2015

Quranic ayah

‎இன்று ஒரு குர்ஆன் வசனம் - وَلَقَدْ أَنزَلْنَا إِلَيْكَ آيَاتٍ بَيِّنَاتٍ ۖ وَمَا يَكْفُرُ بِهَا إِلَّا الْفَاسِقُونَ  ﴿2:99﴾
2:99. (நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்.

Sent from my BlackBerry 10 smartphone.

Friday, February 20, 2015

Today's Quranic ayan


இன்று ஒரு குர்ஆன் வசனம் - وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ وَإِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ  ﴿2:78﴾
2:78. மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை.‎
Sent from my BlackBerry 10 smartphone.

Monday, February 16, 2015

Quran ayah of today

‎இன்று ஒரு குர்ஆன் வசனம் - وَاتَّقُوا يَوْمًا لَّا تَجْزِي نَفْسٌ عَن نَّفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنصَرُونَ  ﴿2:48﴾
2:48. இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

Sent from my BlackBerry 10 smartphone.

Saturday, February 14, 2015

Quranic ayah

 وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ  ﴿2:45﴾
2:45. மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.

Sent from my BlackBerry 10 smartphone.

Quran Ayah of today

‎இன்று ஒரு குர்ஆன் வசனம் - أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنسَوْنَ أَنفُسَكُمْ وَأَنتُمْ تَتْلُونَ الْكِتَابَ ۚ أَفَلَا تَعْقِلُونَ  ﴿2:44﴾
2:44. நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?

Sent from my BlackBerry 10 smartphone.

Saturday, February 7, 2015

Quranic verses of today


இன்று ஒரு குர்ஆன் வசனம் - وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ  ﴿2:23﴾
2:23. இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.

Sent from my BlackBerry 10 smartphone.

Sunday, February 1, 2015

Miracle of Quran


‎Did anyone of us imagine how the sun is gonna rise from the west as said by our prophet muhammed (peace be upon him) 1400 yrs ago..

but now scientists found how it happens..scientists were making researches on MARS for long time....MARS which rotates in the same direction of the EARTH has now started to rotate in the opposite direction...now the sun rises from west in MARS..this is named as RETROGRADE MOTION...and this happens to all planets..amazingly EARTH is next.!!

ALLAH says when the sun rises from the west the doors of FORGIVENESS will be closed..no more dua for repentance will be accepted..it's not too far for this to happen..!!

Let's not waste time on movies, music, parties, etc..spend more time to read and learn QURAN and HADITHS..PRAY five times..and teach our kids on islam..these acts will only benefit us in our GRAVE..

ISLAM is a beautiful religion and ALLAH has made it so easy for us to follow through our beloved PHOPHET MUHHAMMED (peace be upon him)...

Don't just forward this to all..for a sec ask urself..Have we done anything in our life for LIFE AFTER DEATH...??
Are we ready to meet ALLAH on the day of JUDGEMENT???
Remember.. we are all alone on that day..
▪Have you ever wondered what would have happened if we treated the Quran📗 the way we treat our 📱mobile phone...?

▪What if we can carry it with us wherever we go; 
In our bags 💼👜.... & in our pockets?

▪What if we looked at the pages📖 several times a day📆?

▪What if we went back🏃 to take it if it's forgotten😰?

▪What if we treated it as though we cannot live without it..?
- And really, we cannot live without it...!

▪What if we give it to our children 👫 as gifts🎁??

▪What if we read it while travelling✈🚝🚌🚢🚗?

▪What if we made it a priority every day??

Let our logo be :
" The Quran📖 is my best friend💖."

▪Only 7% will re- send this message. 

▪Be amongst them & send it to the largest possible number of people👬👭. 

▪Don't be of the 93% who will not share the message....

▪Think😨... Even once... Day of Judgement... we will realise we daily opened messages from friends👫... 

▪We shared/forwarded the jokes 😂 & gossips👄 ... 

▪But how many times do we open the Quran📗 and read🙇 the messages📖 sent from Allah Subhaana WaTa'aala☝Himself❓

❇Scientifically proven : 
💠Listening👂 to Quran📖 reduces the prevalence of cancerous cells in the human body and even destroys them.

💠The prolongation of prostration strengthens memory😨, and prevents stroke😏.

✴Shaitan👹 said : 
"I wonder how humans👫 claim to Love💘 Allah☝ and disobey Him, and claim they hate😡 me👹 yet they obey me!"

▪Will take 60 seconds to benefit your loved ones, pass it on as a reminder.

🅾Warning - ⚠ ❗
Do not send later. 
Send now. 
May Allah SWT☝ grant success to everyone who reads🙇 and sends📨... Ameen.
Sent from my BlackBerry 10 smartphone.

Monday, January 26, 2015

Quranic verses of today


இன்று ஒரு குர்ஆன் வசனம் -  رَّبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ 
"என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக!. 71:128‎

Sunday, January 25, 2015

Quranic verse of today

‎இன்று ஒரு குர்ஆன் வசனம் -  رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ 
"இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக!". 66:11

Sent from my BlackBerry 10 smartphone.

Saturday, January 24, 2015

Death Of King Abdul Alziz

inaa lillahi wa inna ilayhi rajiuuun. .......

Assalamu Alaykum My Muslim Brothers and Sisters in Islam---We all know that we lost one of our Muslim brother,Abdullah bin Abdulaziz Al Saud who was the King of Saudi Arabia and Custodian of the Two Holy Mosques from 2005 to 2015.
In this picture which i really loved to share with you Vividly moved me.in this picture-Mourners gather around the grave of Custodian of the Two Holy Mosques King Abdullah following his burial in Riyadh’s Al Oud cemetery on Friday. King Abdullah, who died early on Friday after a short illness, was buried in an unmarked grave in keeping with local religious traditions --

My brothers and Sisters in Islam,this should be a reminder for Alll us that how long or short this life is - All is left behind --Fmilies,relative,freinds,wealth and power ...only richness of DEEDS now count.... There is also A lesson in this picture to mankind which is blind earning money and status.worlds richest person going to grave with a piece of cloth and grave no different than a common mans grave.

May the Almighty Allaah azza wa jal forgive him and grant him jannatul firdous
Aaaminn----Aaaaminnn----Aaaminnn.

May the Almighty azza wa jal accept his service for the two holy mosques--
Aaaminnn-----Aaaminn-----Aaaminnn

May Allah grant us mercy ,FORGIVE OUR SINS and as well protect us....

Aameen ya rabbul Aaaamiiin.



I Love Prophet Muhammed (PBUH)


quran ayah of today

‎இன்று ஒரு குர்ஆன் வசனம் -   َ رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
"எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்". 66:8

Sent from my BlackBerry 10 smartphone.

Friday, January 23, 2015

Islam

‎இஸ்லாத்தில் தெரிந்து
கொள்ளவேண்டியவை
 பெருமானார் (ஸல்) அவர்களின்
மனைவிமார்கள்
1 . அன்னை கதிஜா (ரலி)
2 . அன்னை சவுதா (ரலி)
3 . அன்னை ஆயிஷா (ரலி)
4 . அன்னை ஹப்ஸா (ரலி)
5 . அன்னை ஜைனப் (ரலி)
6 .அன்னை உம்மு சல்மா (ரலி)
7 . அன்னை ஜவாரிய்யா பின் ஹரித்
(ரலி)
8 . அன்னை ஜைனப் பின் ஹஜாஷ்
(ரலி)
9 . அன்னை ஹபீபா (ரலி)
10 . அன்னை சபியா (ரலி)
11 .அன்னை மைமூனா (ரலி)
பெருமானார் (ஸல்) அவர்களின்
குழந்தைகள்
பெண் மக்கள்
1 . ஜைனப் (ரலி)
2 . ருகையா (ரலி)
3 . .:பாத்திமா (ரலி)
4 . உம்மு குல்தூம் (ரலி)
ஆண் மக்கள்
1 . காஸிம்(ரலி)
2 . அப்துல்லாஹ்  (ரலி)
3 . இப்ராஹீம்  (ரலி)
பெருமானார் (ஸல்) அவர்களின்
அடிமைகள்
1 . ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி)
2 . ஷக்ரான் (ரலி)
3 . அபூரா.:பி.: (ரலி)
4 . ஸல்மானுல் .:பார்ஸி (ரலி)
5 . ஸ.:பீனா (ரலி)
6 . அபூகப்ஜீஷா (ரலி)
7 . ருவை.:பி.: (ரலி)
8 . ரபாஹூல் அஸ்வத் (ரலி)
9 . .:பழாலா (ரலி)
10 . மித்அம் (ரலி)
பாச நபி (ஸல்) அவர்களின்
பாதுகாவலர்கள்
1 . அபூபக்கர் சித்திக் (ரலி)
2 . ஸ .:து  இப்னு முஆத்  (ரலி)
3 .
முஹம்மது இப்னு மஸ்லமா (ரலி)
4 . ஸுபைர் இப்னுல் அவ்வாம்
(ரலி)
5 . முகீரதுப்னு ஷு.:பாஹ்  (ரலி)
6 .  அபூ அய்யூபுல்
அன்ஸாரி  (ரலி)
7 . பிலால் இப்னு ரபாஹ் (ரலி)
8 . ஸ.: து இப்னு அபீவக்காஸ்
(ரலி)
9 . தக்வான் (ரலி)
10 . இப்னு அபீ மர்ஸத்  (ரலி)
நீதி நபி (ஸல்) அவர்களின்
நிர்வாகஸ்தர்கள்
1 . அப்துர் ரஹ்மான் இப்னு அவ்.:ப்
(ரலி)
2 . பிலால் (ரலி)
3 . அஸத்  இப்னு உஸைத் (ரலி)
4 . முஐகீப் (ரலி)
கவிஞர்கள்
1 . ஹஸ்ஸான் இப்னு ஸாபித்
(ரலி)
2 .
அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி
)
3 . க.:ப் இப்னு மாலிக் (ரலி)
முஅத்தினாக நியமனம் செய்யப்பட்ட
நான்கு பேர்கள்
1 . பிலால் (ரலி)
2 .
அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்
(ரலி)
3 . ஸ.:துல்கர்ள்  (ரலி)
4 . அபூ மஹ்தூரா (ரலி)
பணியாளர்கள்
ஆண்கள்
1 . அனஸ் இப்னு மாலிக் (ரலி)
2 . அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்
(ரலி)
3 . உக்த் இப்னு ஆமிர் (ரலி)
4 . அஸ்க.: இப்னு ஷரீக்  (ரலி)
பெண்கள்
1 . அமதுல்லாஹ்
இப்னு ரஸீனா (ரலி)
2 . மாரியா (ரலி)
3 . கெளலா (ரலி)
பெருமானார் (ஸல்)
அவர்களின்
குதிரைகள்
ஒட்டகங்கள்
1 . ஸக்ப்
2 . முர்தஜிஸ்
1 . கஸ்வா
3 .
லஹீ.:ப்
2 . ஜத்ஆ.:
4 .
லிஜாஜ்
3 . ஆழ்பா.:
5 . ளரி.:ப்
6 .  வர்த்
7 . ஸப்ஹா
8 . ய.:சூப்
வாள்கள்
        உருக்கு சட்டைகள்
1 . ம.:தூர்
1 . தாதுல் .:புழூல்
2 .
ஆழ்ப்
       2 . தாதுல் விஹாஷ்
3 .
துல்.:பிகார்
3 .  தாதுல் ஹவாஷீ
4 .   ஸம்ஸமா
4 . ஸ.:பரிய்யா
5 .
கலயீ
5 . .:பிழ்ழத்
6 .
ஹீ.:ப்
       6 . பத்ரா.:
7 .
ரஸூப்
7 . கிர்னிக்
8 .   மிக்தம்
9 .   கலீப்
வில்கள்
ஈகை நபி(ஸல்) அவர்களின்
ஈட்டிகள்
1 . பைளா.:
1 . முஸ்னா
2 .  ரவ்ஹா.:
2 .   முஸ்வீ
3 .  ஸ.:ப்ரா
4 .  ஜவ்ரா.:
5 .  சதாத்
இஸ்லாமிய போர்
போரின்
பெயர்
பிறை ஹிஜ்ரி
1 .        பத்ரு போர்
ரமலான்
01
2 .
உஹது போர்
ஷவ்வால்                     03
3 . சவீக்
சண்டை
ஷவ்வால் 03
4 .       பனு முஸ்தலிக்
போர்         ஷ.:பான்
05
5 . அஹழ்
போர்                              ஷ.:பான்
05
6 . கைபர்
போர்
ஷ.:பான் 07
7 .       மூத்தாப்  போர்
           ஷ.:பான்
07
8 .       மக்கா வெற்றி
          ஷவ்வால்                      08
9 .       ஹூனைன்  போர்
       ஷவ்வால்                     09
10 .      தபூக்  போர்
ரஜப்                                09
11 .       தாயிப் போர்
09
நபிமார்களுக்கு அருளப்பட்ட வேதம்
பற்றி
நபிமார்கள்
வேதம் பாஷை
மூஸா (அலை)
தவ்ராத்             இப்ரானி
தாவூத் (அலை)
 ஸபூர் யூனானி
ஈஸா (அலை)
இன்ஜீல் ஸூர்யானி
முஹம்மது (ஸல்)
குர்ஆன் அரபி
க.:பா கட்டுவதற்கு கல்
எடுக்கப்பட்ட மலைகள்
1 . ஜபலே தூர்ஸீனா
2 . ஜபலே தூர்ஜீனா
3 . ஜபலே தூர்லப்னான்
4 . ஜபலே தூர்ஜூத்
5 . ஜபலே ஹிரா
கட்டியவர் : இப்ராஹீம் (அலை) ,
இஸ்மாயில் (அலை)
மனிதனின் அந்தஸ்துகள்
(தரஜாக்கள் )
முதலில் மனிதன் மனிதனாக இருக்க
வேண்டும்
1 . மனிதன்
2 . முஸ்லிம்
3 . மு.:மின்
4 . ஸாலிஹ்
5 . முத்தகீன்
6 . வலியுல்லாஹ்
7 . நுகபா
8 . நுஜபா
9 .     அப்தால்
10 .    அக்யார்
11 .    ஆரி.:பீன்
12 .    அன்வார்
13 .    அவ்தாத்
14 .    முக்தார்
15 .    இமாமனி
16 .    குதுப்
17 .    தாபியீ
18 .    சஹாபி
19 .    அன்சாரி
20 .    முஹாஜிரி
21 .    ஷஹீத்
22 .    சித்திக்
23 .    நபி
24 .    ரஸூல்
25 . உலுல் அஜ்ம்
26 . கலீலுல்லாஹ்
27 . உலக முழுமைக்கும் ரஸூல்
28 . காத்தமுன் நபி
29 . ரஹ்மத்தில் ஆலமீன்
30 . ஹபீபுல்லாஹ்
நபிமார்கள் மொத்தம் -  1
24 000 பேர்
ரஸூல்மார்கள்                           -
313 பேர்
குர்ஆனில் சொல்லப்பட்ட
நபிமார்கள்
 - 25 பேர்
313 பேரில் உலுல் அஜ்ம்       -
5 பேர்
1 . நூஹ் (அலை)
2 . இப்ராஹீம் (அலை)
3 . மூஸா (அலை)
4 . ஈஸா (அலை)
5 . முஹம்மது ரஸூல் (ஸல்)
திருக்குர்ஆனின் வசனம்     -
6666
சொற்கள்
 -     75430
எழுத்துக்கள் -
326671
சுவர்க்கத்தின் பெயர்கள்
1 . தாருல் மகாம்
2 . தாருல் ஸலாம்
3 . ஜன்னத்துல் ம.:வா
4 . ஜன்னத்துல் நயீம்
5 . ஜன்னதுல் .:பிர்தெளஸ்
6 . ஜன்னத்துல் அத்னு
7 . இல்லியூன்
8 . ரைய்யான்
நான்கு வகை உயிர்கள்
1 . ரூஹுல் ஜிமாத் -
ஜடப்பொருள்
2 . ரூஹுல் நபாத்து - தாவர
உயிர்
3 . ரூஹுல் ஹைவான்  -
பிராணி  உயிர்
4 . ரூஹுல் இன்சான் -
மனித  உயிர்
நப்ஸின் ஏழு வகைகள்
1 .    நப்ஸ் அம்மாரா
2 . நப்ஸ் லவ்வாமா
3 . நப்ஸ் முத்மாயின்னா
4 . நப்ஸ் முல்ஹிமா
5 . நப்ஸ் ராலிய்யா
6 . நப்ஸ் மர்லிய்யா
7 . நப்ஸ் காமிலா
மனித உள்ளத்தில் ஏழு பாகங்கள்
1 .    தபக்கஹூத்துஸ் தூர்
2 . தபக்கத்துல் கல்பி
3 . தபக்கத்துஷ் ஷிகாப்
4 . தபக்கத்துல் .:புஆத்
5 . தபக்கத்து ஹூப்பத்துல்
கல்லி
6 . இல்முல்லதுன்னி
7 . தபக்கத்துஸ் ஸுவைதா

Sent from my BlackBerry 10 smartphone.

Today's quran Ayah


‎இன்று ஒரு குர்ஆன் வசனம் - رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ  رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ
"எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது". "எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்". 60:4-5

Sent from my BlackBerry 10 smartphone.

Wednesday, January 21, 2015

Today's quran ayan

‎இன்று ஒரு குர்ஆன் வசனம் -   رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ
"எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்". 59:10

Sent from my BlackBerry 10 smartphone.

quranic verses

இன்று ஒரு குர்ஆன் வசனம் -  رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
“எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக”. 14:41

quranic ayah of today

இன்று ஒரு குர்ஆன் வசனம் -  رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ   وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ  وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ
“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”. “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”. “இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”. 26:83-85, 87
இன்று ஒரு குர்ஆன் வசனம் -  رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ   وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ  وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ
“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”. “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”. “இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”. 26:83-85, 87

Quranic verses of today

இன்று ஒரு குர்ஆன் வசனம் - وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ ۚ وَأُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ  ﴿3:105﴾
3:105. (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.

Tuesday, January 20, 2015

quranic ayah of today

இன்று ஒரு குர்ஆன் வசனம் -  رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ   وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ  وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ
“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”. “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”. “இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”. 26:83-85, 87

quran Ayah of today

இன்று ஒரு குர்ஆன் வசனம் -   رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَغَفَرَ لَهُ  إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
“என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!”. 28:16

letter of a mom

அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக
வைக்கும் உண்மை சம்பவம் இது.
பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம்.
அந்த தேசத்தில் ஒரு பெண்
தனது ஒரேயொரு மகனுடன்
வாழ்ந்து வந்தாள். அவளிற்கு ஒரு கண்
இல்லை. தன் மற்றைய
கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய
நிலை. கணவரின்
இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின்
ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால
வாழ்வு பற்றியதாகவே இருந்தது.
தன்னிடம் இருந்த சொத்துக்களில்
ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல
தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள்.
மீகுதி சொத்தை தனது மகனின்
கல்வி தொடர்பான செலவுகளிற்கு தயார்
செய்திருந்தாள்.
நல்ல ஒழுக்கமிக்க மகன். இரக்கமானவன்.
புத்திசாலி. ஊரில் எல்லோரும் புகழும்
வண்ணம் அவன் செயற்பாடுகள் இருந்தன.
பாடசாலையில் முதல் தரத்தில்
சித்தி எய்துபவன் அவன். காலங்கள்
உருண்டன. ஒரு முறை அவன் மிகச்சிறந்த
பெறுபேற்றினை ஈட்டி அந்த
பிரதேசத்திற்கும், அவனது பாடசாலைக்கும்
பெருமை சேர்த்தான்.
இந்த செய்தியை அறிந்த உடனேயே அந்த
தாய் ஆவலுடன்
பாடசாலை நோக்கி ஓடினாள். மகனின்
வகுப்பறை எது என
அறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள்.
இறைவனை புகழ்ந்தாள். சந்தோஷத்துடன்
வீடு வந்து அவனிற்கு பிடித்தமான
உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.
மகனின் வரவை எதிர்பார்த்து வழி மேல்
விழி வைத்து காத்திருந்த தாய் மகன்
வந்தவுடன் வாஞ்ஞையுடன் அருகில்
சென்றாள். ஆனால் மகன்
முகத்தை திருப்பி கொண்டான். தாயுடன்
பேசவில்லை. நேராக அறைக்குள்
சென்று படுத்து விட்டான்.
அவளிற்கு ஒன்றும் புரியவில்லை.
பதற்றத்துடன்
ஓடிச்சென்று என்னவென்றாள்
கவலையுடன். மகன் சொன்னான், " நீ ஏன்
என் பாடசாலைக்கு வந்தாய்?.
அங்கு அழகான பணக்காரர்கள்
மட்டுமே வருவார்கள். நீயோ குருடி. என்
நண்பர்கள் என்னை குருடியின் மகன் என
கூப்பிடுகின்றனர். இது பெரிய
அவமானம். வெட்கம். இதன் பின்னர் நீ என்
பாடசாலை பக்கமே வராதே" என கத்தினான்
கோபமாக. அதிர்ந்து போனாள் தாய்.
ஆனாலும் மகனின் சந்தோஷம்
கருதி இனி அவ்வாறு நடக்காது என
சத்தியம் செய்தாள்.
இப்போது அவனது சுபாவம் மேலும்
மாறுபட ஆரம்பித்தது. தன்னை தேடி வரும்
நண்பர்கள் முன் வர வேண்டாம் என
தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க
சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்ற
பின், தனக்கு குருடியுடன்
இருப்பது வெட்கம் என்றும், தான்
ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான்.
ஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான்.
அவள் கதறி துடித்தாள், தினமும் தன்
மகனை நினைத்து.
இறுதி பரீட்சையில் பாஸாகி, மருத்துவ
கல்லூரிக்கு மகன்
தெரிவானது அவளிற்கு தெரியவந்தது.
தலை நகர் சென்று படிக்க வேண்டும்.
நிறைய செலவாகும். தனது மிகுதமிருந்த
அனைத்து சொத்துக்களையும்
விற்று மகனிற்கு அனுப்பி வைத்தாள். 5
ஆண்டுகள் பறந்து சென்றன.
இப்போது அவளது மகன் ஒரு மருத்துவன்.
அவனை பார்க்க அவள் பல
முயற்ச்சிகளை மேற்கொண்டும் எதுவும்
பயனற்று போயின. ஒரு கடிதம் மகனிடம்
இருந்து வந்தது. அதில், " உம்மா, நான்
இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த
வைததியர்களில் ஒருவன். குருடியின்
மகன் வைத்தியன் என்பது தெரிந்தால்
எனது கொளரவம் பாதிப்படையும். ஆதலால்
நான் இந்த நாட்டை விட்டும் உன்
பார்வையை விட்டும் கண்காணாத தேசம்
செல்கிறேன்". இது தான் அந்த கடிதத்தின்
வரிகள். துடித்து போனாள் தாய்.
சில வருடங்கள் கடந்தன. முதுமையும்,
வறுமையும்,
அவளது ஒற்றை கண்ணுமே அவளிடம்
எஞ்சியிருந்த சொத்துக்கள். பசி காரணமாக
ஒரு பணக்கார வீட்டில் ஆயாவாக தினமும்
வேலை செய்து வந்தாள் அந்த தாய். அந்த
வீட்டின் எஜமான இளவயதினள். நல்ல
இளகிய குணம் படைத்தவள்.
இறையட்சமிக்கவள். அவளும்
ஒரு வைத்தியராகவே இருந்தாள். இந்த
தாயை தனது தாயக
நேசித்து போஷித்து வந்தாள். எல்லாம்
நன்றாகவே நடந்தன.
அவளது கணவன் அமெரிக்காவில்
இருந்து திரும்பி வந்தான்.
தனது எஜமானியின் கணவர் வருகிறார்
என்பதனால் வாய்க்கு ருஷியாக நல்ல
உணவுகளை தயார்படுத்தி வைத்திருந்தாள்
அந்த குருட்டு தாய்.
வீடு வந்த அவளது கணவன், சில
நாளிகைகளின் பின்னர் சாப்பிட
அமர்ந்தான். உணவை ஆசையாக வாயில்
அள்ளி திணித்தான். திடீரென அவன்
முகம் மாறியது. கருமை அவன் முகத்தில்
அப்பி கொண்டது. சடாரென
தனது மனைவியின்
முகத்தை பார்த்து கேட்டான், "இதனை நீ
தான் சமைத்தாயா?" என்று.
மனைவி குழப்பத்துடன்
இல்லையே என்றாள். " அப்படியானால் யார்
சமைத்தது" இது அவனது இரண்டாம்
கேள்வி. வீட்டு வேலைக்காரி சமைத்தாள்
என்றாள் மனைவி. உடன் எழுந்த அவன்
அடுப்படிக்கு சென்று எட்டி பார்த்தான்.
உள்ளே அவனது குருட்டு தாய்.
அதிர்ந்து போனார்கள் இருவரும். இவள்
இன்னும் இங்கேயா எனும் ஆத்திரமும்,
வெறுப்பும் அவன்
மூளையை ஆட்டுவித்தது. என்
மருமகளா என் எஜமானி என்ற சந்தோஷமும்,
மகிழ்ச்சியும் அந்த தாயின்
இதயத்தை நிரப்பின. உணற்ச்சிகளால்
இருவருமே பேசவில்லை.
மீண்டும் சாப்பாட்டு அறைக்கு வந்த
வைத்தியன் சொன்னான் தன்
மனைவியை பார்த்து, "இந்த
குருடியை உடனடியாக
கொண்டு சென்று வேறு எங்காவது விட்டு விடு.
கண்காணாத இடத்தில்". கத்தினான். அவன்
சத்தம் அடுப்படியில் நின்ற அந்த
அபலை தாயின் இதயத்தில்
முட்டி மோதி நின்றது.
துவண்டு போனாள்.
வாழ்க்கையை இதற்கு பிறகும் வாழ
வேண்டுமா என எண்ணி அழுதாள்.
தனது கணவனின் பிடிவாதமும், கோபமும்,
ஆவேசமும் எல்லை மீறி செல்லவே,
அவனது மனைவியான அந்த பெண்
வைத்தியர்
வேறு வழியின்றி அவளிற்கு போதுமான
பணத்தினை வழங்கி பல நூறு கிலோ மீட்டர்
தூரத்தில் முன்பு அவள் வாழ்ந்து வந்த
இடத்திற்கே மீண்டும் அனுப்பி வைத்தாள்
அழுகையுடன்.
காலம் மீண்டும் வேகமாக அசைந்தது.
இப்போது அந்த வைத்தியனின்
தலை மயிர்கள் பழுக்க
ஆரம்பித்து விட்டன. உடல் பலம்
சற்று சோர்ந்தும் போய்விட்டது. கணவனின்
தொடரான சுயநலன், நன்ற மறத்தல் போன்ற
காரணங்களினால் கருத்து மோதல்
ஏற்பட்டு அந்த வைத்தயரான மனைவியும்
இவரை விவாகரத்து செய்து விட்டு இன்னாரு மறுமணம்
புரிந்து கொண்டாள்.
இப்போது வைத்தியரிடம் பணத்தை தவிர
வேறு எதுவும் இருக்கவில்லை.
தனி மரமாக, எதிர்காலங்கள் சூனியமான
நிலையில், ஆறுதலிற்கு கூட தலை வருட
யாரும் இன்றி தனி மரமாக நின்றான்.
மெல்ல மெல்ல தான் தன் தாயிற்கு செய்த
துரோகங்கள், அநியாயங்கள்,
நோகடிப்புக்கள் அவன்
உள்ளத்ததை வந்து உசுப்ப ஆரம்பித்தன.
ஒரு முறை நடுநிசியில்
எழும்பி உம்மா என கத்தி அழும்
அளவிற்கு அவனிற்கு தனது பாவங்களின்
பாரம் புரிந்து போனது.
ஒரு நாள் காலை அவன்
தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது.
அவனது தூரத்து உறவினர் ஒருவர்
பேசினார். "உன் தாய் தள்ளாத வயதில்
மரணிக்கும் தறுவாயில் ஸகராத் எனும்
நிலையில் இருக்கிறாள்" என்பதே அந்த
செய்தி. உடனடியாகவே அவன்
தனது காரில் கிளம்பி தாயிருக்கம்
இடத்திற்கு சென்றான். அவன் சென்ற போது,
அவளது உயிர் பிரிந்து விட்டது.
ரூகூ போன நிலையில் அவளை கட்டிலில்
கிடத்தி வைத்திருந்தனர். இப்போது "உம்மா"
என கதறினான். கண்ணீர் விட்டான்.
ஜனாஸாவை நல்ல முறையில் அடக்கம்
செய்ய உதவினான்.
இப்போது ஒரு கடிதத்தை அவனது உறவுக்காரர்
கொடுத்தார். தான் மறைந்த பின்னர், மகன்
வருவானாக இருந்தால் மட்டும்
கொடுக்குமாறும், இல்லையெனில்
எரித்து விடுமாறும் தயார்
கடைசி தருவாயில் வேண்க்கொண்டதாகவும்
அவர் சொன்னார். பிரித்து வாசித்தான்.
அவன் கண்களில் இருந்த வழிந்த கண்ணீர்
அந்த பாலைவெளியையே சகதியாக
மாற்றியது.
அதில் இருந்த வரிகள் இதுதான்....
"அன்பின் மகனே!..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.
எனக்கு தெரியும், என்
உருவத்தை பார்ப்பது உனக்கு ஒரு போதும்
பிடிக்காது என்று. அதனாலேயே,
எனது மரணத்திற்கு பின்னர் நீ வந்தால்
மட்டும் இதனை கொடுக்கும்படி சொன்னேன்.
மற்றபடி எனது அன்பு என்றும் மாறாதது.
அது இறைவனிற்கு மட்டுமே தெரிந்த
விஷயம். மகனே நான் குருடிதான்.
உனக்கு குருடி தாய் இருந்திருக்க
கூடாது தான். எனக்கு உன் உள்ளம்
புரிகிறது.
உனது உள்ளத்து உண்ர்வுகளை நான்
பெரிதுமே மதிக்கின்றேன். நான்
உன்னை சபித்தது கிடையாது. ஏன்
கோபப்பட்டது கூட கிடையாது.
எனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும்
என்றிருந்தால் நான் இன்னொரு திருமணம்
முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன்.
உனக்காகவே நான் வாழ்ந்தேன். அதை நீ
புரிந்து கொள்ளாமல் போய் விட்டாய்!
மகனே உனக்கு தெரியுமா? நான் ஏன்
குருடியானேன் என்று!
அப்போது உனக்கு சின்ன வயது.
பாதையில் நின்று நீ விளையாடிக்கொண்ட
ிருந்தாய். ஏதோ ஒரு பொருள் உன் கண்களில்
பட்டு உன் ஒரு கண் குருடாகி விட்டது.
வைத்தியர்கள் இன்னொரு வெண்படலம்
இருந்தால் மட்டுமே உன்
பார்வையை மீண்டும் கிடைக்க வைக்கலாம்
என்றனர். என்ன
செய்வதென்று தெரியவில்லை. நேரமும்
போதாது.
அதனால்....
என் ஒரு கண்ணை உடனடியகாவே தானம்
செய்து உனக்கு பார்வை கிடைக்க
செய்தேன்.
எனது கண்மணியே இன்று உன்
கண்களாக இருக்கிறது. நீ இந்த உலகத்தை,
வாழ்க்கையை பார்ப்பதும் அந்த
கண்களாளேயே!...
உனக்கு இதுவும் அவமானம் என்றால்
உனது வலது கண்ணை பிடுங்கி எறிந்து விடு.
ஏனென்றால் அது ஓர் குருடியின்
கண்ணல்லாவா? இல்லை மனமிருந்தால்
அப்படியே விட்டு விடு. அந்த கண்களால்
நான் உன்னை பார்த்துகொண்டிருப்பேன்."
இப்படிக்கு, என்றுமே அன்புள்ள,
உன் குருட்டு உம்மா.

இன்று ஒரு குர்ஆன் வசனம-

 -   رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
“என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்”. 28:24